ராஜித தலைமறைவு?

முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தன்னுடைய கைபேசியை அணைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என ஊழல் தடுப்பு ஆணைக்குழு கடந்த 11ஆம் தேதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன காகுணவெல அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிந்த மீன்வள துறையிலுள்ள மணல் தோண்டும் திட்டத்தை கொரிய நிறுவனத்துக்கு வழங்கியதன் மூலம் ரூ.2.62 பில்லியன் அளவிலான நட்டம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ராஜிதசேனாரத்னவை கைது செய்ய ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளார்.

இத்தோற்றத்தில் முன்னாள் அமைச்சரிடம் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அறிக்கை வழங்குமாறு அறிவித்திருந்தது.

ஆனால் அவர் தொடர்ந்து அவ்வாறு அறிக்கை வழங்குவதை தவிர்த்து வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மருத்துவ அறிக்கை சட்டத்தரணியால் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அதற்காக சட்ட ரீதியான அடிப்படை எதுவும் இல்லை என அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *